News

உயர்தர மாணவர்க்கான கருத்தரங்கு இறுவட்டு


வட மாகாண கல்வித் திணைக் களமும் தொண்டைமானாறு வெளிக்கள நிலையமும் இணைந்து நடாத்த திட்டமிட்டிருந்த க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான ஐந்தாம் தவணை பரீட்சை கொரோனா வைரஸ் காரணமாக நடைபெறவில்லை .
எனினும் பரீட்சை வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப் பட்டு வீட்டிலிருந்து பயிற்சியில் ஈடுபடுவதற்கு அறிவுறுத்தல் கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவ்வினாத்தாள்களுடைய புள்ளித்திட்டமிடல் தொடர்பான துறைசார் வளவாளர்களின் கருத் தரங்கு காணொளி இறுவட்டு வடிவில் பிரதி செய்யப்பட்டு வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர் வமாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமாரிடம் தொண்டைமானாறு வெளிக்கள திலையத்தினரால் கையளிக்கப் பட்டது.

No comments

Lanka Education. Powered by Blogger.