News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான அறிவித்தல்



பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னாயத்தமாக தொற்று நீக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டி யுள்ளதால் பல்கலைக்கழக விடுதிகளில் தங்குமிடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 21.06.2020 க்கு முன்பாக விடுதிக ளில் இருந்து தங்கள் உடமைகளை எடுத்துச் செல்லுமாறு இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மாணவர்கள் தங்கள் விடுதிக்குரிய உப காப்பாளரைத் தொடர்புகொண்டு உடமைகளை எடுப்பதற்கான நேரம் மற்றும் திகதிகளை ஒதுக்கிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். குறித்த காலப்பகுதியினுள் தங்கள் உடமைகளை ஏதும் தவிர்க்க முடியாத காரணத்தால் எடுத்துச் செல்ல முடியாத மாணவர்கள் முற்கூட்டியே தங்கள் விடுதிக்குரிய உப காப்பாளரைத் தொடர்புகொண்டு அறிவித்தல் வேண்டும். என பதிவாளர் அறிவித்துள்ளார்

No comments

Lanka Education. Powered by Blogger.