News

உயர் தர பரீட்சையை ஒத்தி வைக்குமாறு அறிவுறுத்தல்

செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி உயர் தர பரீட்சையை நடத்துவதை சிறந்த முறையில் ஒத்தி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் உட்பட அமைச்சின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சூழ்நிலையையும் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களின் சாதாரண உரிமையையும் கருத்திற் கொண்டு இந்த விடயம் தொடர்பில் மேலும் கவனம் செலுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்

No comments

Lanka Education. Powered by Blogger.