News

இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளுதல்

இலங்கை சட்டக் கல்லூரி
நுழைவுப் பரீட்சை 
பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளுதல்

வெளியிடங்களில் வசிக்கும் விண்ணப்பதாரிகள் நலன் கருதி, நுழைவுப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க முடியும்.

ஆவணங்களுடன் விண்ணப்பங்களை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அதிபர்,
இலங்கை சட்டக் கல்லூரி
இல - 244, கல்ப்ஸ் டொர்ப் வீதி
கொழும்பு - 12

விண்ணப்பம் தொடர்பான விபரம்
இலங்கை சட்டக்கல்லூரி 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான  அனுமதி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமைகள்

1.  க.பொ.த (உயர் தரம்) -  புதிய பாடத்திட்டத்தில் 3 பாடங்களிலும்  பழைய பாடத்திட்டத்தில் 4 பாடங்களிலும் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்
2  க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் / தமிழ் பாடங்களில் C சித்தி அடைந்திருத்தல் வேண்டும்
3.  விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் திகதியன்று விண்ணப்பதாரி 17 வயதை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்


விண்ணப்ப முடிவு : 10. 08. 2020

தகவல் : அதிபர், இலங்கை சட்டக் கல்லூரி

No comments

Lanka Education. Powered by Blogger.