News

பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக மீண்டும் மூடப்படும்



இரண்டாம் தவணை பரீட்சைகள் நடைபெறாமாட்டாது எனினும் பாடசாலைகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதம் வழங்கப்படும் விடுமுறை செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஜீலை 6 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 4 ஆம் திகதிவரை நடைபெறும். மூன்றாம் தவணை ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 27 வரை நடைபெறும். இரண்டாம் தவணை விடுமுறை செப்படம்பர் 5 ஆரம்பமாகி ஒக்டோபர் 4 வரை நீடிக்கும்.

இக்காலப்பகுதியிலேயே கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.மூன்றாம் தவணை விடுமுறை வழமை போன்று நவம்பர் 27 ஆரம்பமாகி 2021 ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும்.




No comments

Lanka Education. Powered by Blogger.