News

விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளது ...........



இலங்கை கல்வி அமைச்சினால் , கோவிட் 19 காரணமாக வீடுகளில் தங்கியுள்ள மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட " நாட்டுக்கு பெறுமதியான புத்தகம் எழுதும் தேசிய வேலைத்திட்டம்" இனூடாக மாணவர்களின் படைப்புக்களைக் கையளிக்கும் இறுதித் தினம் 2020.06.30 என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும் பாடசாலை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதனால் ஆக்கங்களைக் கையளிக்கும் இறுதித் தினம் 2020.07.10 என மீள அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, 2020.07.10ஆம் திகதி அதிபர்களூடாக கோட்டக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஆக்கங்களைக் கையளிக்க வேண்டி இருப்பதால்  2020.07.08ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் தங்களின் படைப்புக்களை பாடசாலைகளுக்கு கையளிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். 

No comments

Lanka Education. Powered by Blogger.