News

உயர்தர பரீட்சையை நடாத்த தீர்மானித்த திகதியில் மாற்றம்?

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகள் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்தவும், பரீட்சைக்கு தயாராகவும் உரிய காலவகாசம் வழங்கப்படும் .ஆசிரியர்கள், மாணவர்களின்அபிப்பிராயத்தை கருத்திற்
கொண்டே உயர்தரபரீட்சையை நடத்த தீர்மானித்ததிகதியில் மாற்றம்ஏற்படுத்தப்பட்டுள்ளது என
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயர்தர பரீட்சையினை நடத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் மாற்றம் ஏற்படவுள்ளது. மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகுவதற்கு காலவகாசம் வழங்கப்படும்,
இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் விரைவில் உரிய தீர்மானத்தை அறிவிக்கும். ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்கள் பரிசீலனை செய்யப்படும்.

No comments

Lanka Education. Powered by Blogger.