ஜூலை 27ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்
நாட்டின் சகல பாடசாலைகளும் எதிர்வரும் ஜூலை 27ம் திகதி தரம் 11, 12, 13 மாணவர்களுக்கு மாத்திரம் ஆரம்பம் - கல்வி அமைச்சு..!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பை கருதி பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட இடைக்கால விடுமுறை மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் திடீரென கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையின் காரணமாக கடந்த திங்கட்கிழமைமுதல் ஒருவாரகாலத்திற்கு அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
நாளைமறுதினம் திங்கட்கிழமையுடன் இந்த இடைக்கால விடுமுறை நிறைவடைய இருந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் கல்வி அமைச்சில் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடலில் மேலும் ஒருவாரகாலத்திற்கு இடைக்கால விடுமுறையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
![](https://scontent.fcmb4-1.fna.fbcdn.net/v/t1.0-9/110266965_3235893656471870_6996125840972833934_o.jpg?_nc_cat=102&_nc_sid=730e14&_nc_ohc=xBgm6ks-FmUAX-RPyM2&_nc_ht=scontent.fcmb4-1.fna&oh=e0d0c6280a96910c54324c4d4a966e19&oe=5F385F24)
![](https://scontent.fcmb4-1.fna.fbcdn.net/v/t1.0-9/112961910_3235894003138502_3834201925455396749_o.jpg?_nc_cat=107&_nc_sid=730e14&_nc_ohc=ulMIg-snEjYAX9VjpLt&_nc_ht=scontent.fcmb4-1.fna&oh=b181a9160427560a4fa43ae1b50c7de1&oe=5F3A2990)
No comments