News

சாதாரண தரப் பரீட்சை: மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் - நீடிக்கப்பட்டுள்ளது !

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்


2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலின் ஊடாக விண்ணப்பங்களைப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Tags:- Schools, Exams, Students, Re correction, Re scrutiny, Date, Extended, Lanka Educations, Learn Easy, lkedu

No comments

Lanka Education. Powered by Blogger.