மேலதிக வகுப்புகளுக்கு பொலிஸார் சுகாதார வழிகாட்டல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis2OU1rJ86TuT0BwbDIiu6ReGfB2tXX2mWPd5o45zG_4HuCiA5iYExyIikJ_H-SBg-ECA3YQVtWbjX90U_qLkwH0iIrTUfbLGPOc0V0EnWRxyF2eqXPsj_v0Gy6yp5ZudCAPJwtvoGyCLL/s640/09ec1673ec40969c54f2bf1b383a9087_XL.jpg)
மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டி ஆலோசனைகள் குறித்து அனைத்து தரப்பினருக்கும் தெளிவுபடுத்தும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலதிக வகுப்புக்களை கற்பிக்கும் பணியாளர் சபை, மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு சம்பந்தபட்ட வழிகாட்டி ஆலோசனைப் பிரதி ஒன்றை வழங்கி தெளிவு படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த வழிகாட்டி ஆலோசனை பிரதியை மேலதிக வகுப்பு நடைபெறும் இடங்களில் காட்சி படுத்துமாறும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் விலியுறுத்தியுள்ளார். நிபந்தனைகளின் அடிப்படையில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தற்பொழுது அரசாகம் அனுமதி வழங்கியுள்ளது.
Tags:- Extra classes, Re start, Healthy ways, Police
No comments