News

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்றார்



யாழ்ப்பாண பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில், புதிய துணைவேந்தர் சிவக்கொழுந்து ஸ்ரீ சற்குணராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதனையடுத்து, அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர், பல்கலைக்கழக துறைசார் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால், மூத்த பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா யாழ். பல்கலைக்கழகத்தின் கணித புள்ளிவிபரவியல் துறையில் இதற்கு முன்னர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Lanka Education. Powered by Blogger.