News

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்!

 

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயம் தவிர்ந்த நாட்டின் 39 நிலையங்களில் 391 மதிப்பீட்டு அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இப்பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020.10.22 ஆம் திகதி ஆரம்பமாகும் மதிப்பீட்டுப் பணிகள் 27 ஆம் திகதி வரை தொடரும்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பான பயிற்சிச் செயலமர்வு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Get in Touch With Us to Know More
Like us on Facebook




No comments

Lanka Education. Powered by Blogger.