உயர் தரத்திற்கு தோற்றும் மாணவருக்கு கொரோனா தொற்று!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjISFNIt83_EMwGDvgyT3pwSoeU-RmWzeEweuS0C-QXr3eEfqTLDUkaxXQAKQcaaQDSPRKy2hOFBAF-6bDgb7y6H4hocnNy5WWBUcnMgX6r3SiiIvMUb8LFdbzw2QiQpn21JNClP6Y62kxU/w640-h366/unnamed.jpg)
இந்த ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் திவுலபிட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கோவிட் 19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாணவரின் குடும்ப உறுப்பினருக்கு கோவிட்19 முன்பு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் இம்மாணவன் பி.சி.ஆர் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்ட பின்னர் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த மாணவருடன் பரீட்சைக்கு தோற்றிய 20 மாணவர்களுக்கு இரண்டு குழுக்களாக தேர்வுக்கு அமர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் இரணவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு நிறுவப்பட்டுள்ள பரீட்சை மையத்தில் பரீட்சைக்கு அமர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
No comments